எருமையின் மீது நாரை.

எருமையின்  மீது நாரை

தமிழ்ச்செம்மல் முனைவர் வை.சங்கரலிங்கனார்

பழமொழி நானூறு என்பது, சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று தான் இந்த பழமொழி நானூறு. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும்.

இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. "குளந்தொட்டுதேரை வழிச் சென்றார் இல்" என்ற பழமொழி குறித்த கதையும் கருத்தும் கீழே இடம் பெற்றுள்ளது. அதில் எருமையின் மீது நாரை தூங்கும் காட்சியும் விரிகிறது..

Read More ...

Related Post